(புதியவன்)
வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிதண்ணீரை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்ட ஆரம்ப நிகழ்வு மன்னார் வெள்ளாங்குளத்தில் இன்று நடைபெற்றது.
பாலியாறு நீர்த்திட்ட ஆரம்ப நிகழ்வுக்கான நினைவுப் பாதாதையை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் திரைநீக்கம் செய்யப்பட்டு தொடர்ந்து பாலியாறு நீர்த்திட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்துக்காக 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டத்தையும், பூநகரி பிரதேசத்தின் ஒரு பகுதியையும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 746 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான்,நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், வடக்கு மாகாண தலைமைச் செயலர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.