(புதியவன்)
முள்ளிவாய்க்கால் மண்ணிலே தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றதில் 10:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக நிகழ்வு இடம்பெற்றது
முள்ளிவாய்க்கால் மண்ணிலே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பால் நினைவு பேருரை ஆற்றி மணி ஒலி எழுப்பப்பட்டு அக வணக்கம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து இறுதிப் போரில் தன்னுடைய கணவனை இழந்த முள்ளியவளையை சேர்ந்த கோவிந்தராசன் புனிதவதி. பொதுச்சுடரை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளும் தங்களுடைய உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடர் ஏற்றி அக வணக்கம் செலுத்தினர்
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்கு பன்னாட்டு மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் வருகை தந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.