(ஆதவன்)
உடுத்துறையில் இளம் குடும்பப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கணவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுத்துறை வடக்கைச் சேர்ந்த ஜெகசீலன் சங்கீதா (வயது-44) என்ற 3 பிள்ளைகளின் தாய் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த புதன்கிழமை கணவரை கைது செய்தனர். சந்தேக நபரான கணவரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.