(மாதவன்)
இன்றையதினம் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்திலும் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்நினைவேந்தல் நிகழ்வானது யாழ் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியின் முன் இடம்பெற்றது.
.இதன்போது பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அதன் பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.