(இனியபாரதி)
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும், உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்திக்கான சிறப்புப் பூஜை வழிபாடுகளும் இன்று மதியம் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றன.
உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும் முன்னாள் போராளியுமான ஆண்டிஐயா விஜயராசவால் பொதுச் சுடர் ஏற்றி மலர் துாவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றை உள்ளடக்கிய துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்திப் பவனியும் காரைநகரில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான தவமணி ,நாகராஜா ,சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.