வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து நம் முகத்தை மிகவும் பளபளப்பாக மாற்ற முடியும். மேலும் பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும் சற்று அதிகரித்து காணப்படும்.
1.உருளைக்கிழங்கு ஒரு பேஸ்டாக ரெடி செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் ஆரோக்கியமாக இருக்கும்.
2.காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர நல்ல பலன் தரும். சுருக்கங்கள் மறையும்.
3.ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் நல்ல பலன் இருக்கும்.
4.தினமும் குளிப்பதற்கு 20 நிமிடம் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குளித்து வர முகம் பொலிவு பெறும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.