இலங்கை கிரிக்கெட்டுக்குள் குறாவளி சுழன்றடிக்கத் தலைப்பட்டிருக்கின்றது. உலகக்கின்னத் தொடரில் இலங்கை அணி படுமோசமான தோல்வியடைந்ததை அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான், இலங்கை கிரிக்கெட் சபையை கூண்டோடு பதவி விலக்கி, உலகக்கிண்ணத்தை வென்று தந்த தலைவரான அர்ஜூன ரணதுங்க தலைமையில் புதியதொரு இடைக்காலக் குழுவை நியமித்திருந்தார். கிரிக்கெட் சபையின் முன்னாள் அதிகாரிகள் இடைக்காலக் குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய நிலையில், அந்தக் குழுவுக்கு 14 நாள்கள் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதையடுத்து இலங்கை கிரிக்கெட் சபையினரை மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் என்று பகிரங்கப்படுத்தியிருக்கின்றார். ரொஷான் ரணசிங்க மட்டுமல்லாமல் இடைக்காலக் குழுவை நீக்குமாறு ஜனாதிபதி வழங்கிய அழுத்தம் மற்றும் மிரட்டலையும் அவர் புட்டுப்புட்டு வைத்திருக்கின்றார்.
உலகில் பெரிதும் அறியப்படாத கொசோவோ என்ற நாட்டை சர்வதேச அரங்குக்கு அறிமுகப்படுத்தியது ஓர் ஒலிம்பிக் பதக்கம்தான். 2016ஆம் ஆண்டு பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் தொடரின்போது மஜ்லிண்டா கெல்மன்டி என்ற வீராங்கனை மல்யுத்தத்தில் வென்ற தங்கப்பதக்கமே கொசோவோவை உலகில் பேசவைத்தது. அதுபோன்றுதான், 1996ஆம் ஆண்டு இலங்கை கைப்பற்றிய கிரிக்கெட் உலகக்கிண்ணம் இந்தத் தீவுக்கு ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத் தது. அன்றுமுதல் இலங்கை அவ்வப்போது சில சரிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்தாலும் அதலபாதாளத்தில் வீழ்ந்து விடவில்லை. ஆனால், இப்போது தன் அங் கீகாரத்தை இழந்து - அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது இலங்கைக் கிரிக்கெட் ஒரு பசியமரத்தை மெல்ல ஆக்கிரமித்து அதை இரையாக்கும் கறையான்போன்று ஊழல் இந்தத் தீவை மட்டுமல்ல இந்த நாட்டின் கிரிக்கெட் டையும் சேர்த்தே சீரழித்தது - சீரழித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதிலிருந்து விடுபடுவதற்குரிய எந்தவொரு வாய்ப்பும் சாத்தியப்பாடுகளும் இருப்பதாகத் தெரியவேயில்லை. கிரிக்கெட்சபையைச் சீரமைப்பதற்கு விளையாட் டுத்துறை அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட எத்தனங்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களும். இந்த அழுத்தம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துகளும் கூட அதைத்தான் மெய்ப்பிக்கின்றன.
இதேவேஊைழல்மட்டுமாஇலங்கைக்கிரிக்கெட்டை இல்லாமவாக்கிக் கொண்டிருக்கின்றது என்று கேட்டால் அதற்குரிய பதில் இல்லையென்பதே. எத்தனையோ திறமையான வீரர்கள் இருந்தாலும், தெற்கில் ஓரிரு மாவட் டங்களைச் சேர்ந்த வீரர்களே அணிக்குள் உள்வாங்கப்படுகின்றனர். கொழும்பிலுள்ள சில பாடசாலைகளில் கற்றிருந்தால் இலங்கைக் கிரிக்கெட் அணிக்குள் இலகுவில் இணையலாம் என்பதுதான் இங்கு கூடுதல் தகைமை. இவ்வாறிருக்கையில் எவ்வாறு இலங்கைக் கிரிக்கெட் பலம்பெறும்? எவ்வாறு அது கட்டமைக்கப்படும்?
இலங்கைக் கிரிக்கெட் அணியைப் பலப்படுத்தும், மீளமைக்கும் உயர்மட்டக்கலந்துரையாடலொன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. சங்கக்கார, மஹேல, ரணதுங்க என பெரும் தலைகள் அந்தக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இதன்போது, இலங்கைக் கிரிக்கெட் பலம்பெறவேண்டுமாயின் அணித்தெரிவு பரந்துபட்டு மேற்கொள்ளப்பட வேண்டும். வடக்கு - கிழக்கில் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்கள் அணிக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்று சங்கா வலியுறுத்தியிருந்தார். ஆனால், வெறும் கண்துடைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட அந்தக்கலந்துரையாடலின் பரிந்துரைகள் எவையும் செவிமடுக்கப்படவில்லை- நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கிரிக்கெட் சபைக்குள் நிலவும் ஊழலை ஒழிக்காமல், அணித்தெரிவைப் பரவலாக்காமல், வடக்கு - கிழக்கு மாகாண வீரர்களுக்கு கடினப்பந்து ஆடுகள வசதிகளை ஏற்படுத்தாமல் கண்துடைப்புக்காகவும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காகவும் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஒருபோதும் நிலையான தீர்வைத்தராது. ஒருகாலத்தில் ஆசியாவின் அடையாளமாக இருந்த இலங்கை அணி இன்று ஆசியாவின் அசூசையாக மாறியிருக்கின்றது என்றால் அதற்கு இந்த மெத்தனப்போக்கும் ஒரு காரணம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.