அதிகாரிகள் அசண்டை:
ஆதவன்.
முல்லைத்தீவு - தேவிபுரம் பாடசாலையின் கூரையின் மரங்கள் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயநிலையில் சேதமடைந்து காணப்படுகின்றன, என்று பாடசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. பாடசாலையின் பழைய மாணவர் சங்கக் கூட்டம் அண்மையில் பாடசாலை அதிபர் பு.சற்குணசீலன் தலைமையில் நடைபெற்ற போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. பாடசாலையின் இந்தக் கூரை 2010 ஆம் ஆண்டின் பின்னர் அமைக்கப்பட்டது. பாடசாலைக்கட்டட வேலைகளில் ஈடுபட்ட ஒப்பந்தகாரர்கள் தரங்குறைந்த மரங்களைப் பயன்படுத்தியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சத்துடனேயே கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதுதொடர்பில் புதுக்குடியிருப்பு கல்விக் கோட்டம், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனை என்பவற்றுக்குச் சுட்டிக் காட்டியபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பில் துறைசார் பணிமனைகளுக்கு மீண்டும் கடிதங்கள் அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, என்றும் தெரிவிக்கப்பட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.