புதியவன்
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட ஆறு தமிழக மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மீன்பிடியில் ஈடப்பட்ட மீனவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(ஒ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.