ஆதவன்.
உக்ரைனை ஆதரிக்குமாறு வலியுறுத்தி ஸ்லோவாக் கியாவில் பல்லாயிரம் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணி நடத்தியுள்ளனர். ஸ்லோவாக்கியா அரசாங்கம் ரஷ்யாவுடன் காட்டிவரும் நெருக்கத்தைக் கண்டித்தே பல்லாயிரம் மக்கள் இணைந்து இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர். ஸ்லோவாக்கியாவில் பிரதமர் றொபேர்ட்பிகோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து. ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிவரும் ஆதரவுகளையும் உதவிகளையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார். இதையடுத்தே பல்லாயிரம் மக்கள் இணைந்து ஸ்லோவாக்கிய அரசாங்கத்துக்கு எதிராக இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர்.
உக்ரைனின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும். போர்க்குற்ற வாளியான புடினுக்கு ஸ்லோ வாக்கியா ஆதரவு வழங்கக்கூடாது என்று போராட் டத்தில் ஈடுபட்ட மக் கள் வலியுறுத்தினார்கள். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.