(ஆதவன்)
புதுக்குடியிருப்பு, தேராவிலில் இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 21 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் 23 வயதுடையவர் என்றும், அவர் புதுக்குடியிருப்புப் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபரைப் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் நீதிமன்றில் முற்படுத்திய போது, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது நீதிமன்றம். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.