(ஆதவன்)
ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இம்முறை மேதினக் கூட்டத்தைக் கொழும்பு பஞ்சிகாவத்தையில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் பின் தள்ளப்பட்டிருந்தது. எனினும் வீழ்ச்சியடைந்த - அநாதரவாக நின்ற நாட்டை எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வந்து ஏற்றார். ஐக்கிய தேசியக் கட்சி மீதும் மக்களுக்கு தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்ப அரச தலைவர் ரணிலால் முறையான வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் ஆதரவாளர் களின் எழுச்சியுடன் எதிர்வரும் மேதினத்தில் நிரூபிக் கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.