ஆதவன்.
கச்சதீவு விவகாரத்தில் தி.மு.க. அரசே தமிழகத்துக்கு மிகப்பெரும் துரோகத்தைச் செய்தது என்று ஆளும் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவரான அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கச்சதீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு செய்தது என்ன? தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபடுவதையும். சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? தமிழகத்துக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன? தமி ழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு வழங்கிய பதிலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
முதல்வர் ஸ்டாலினுக்குப் பதிலளித்து வெளியிட்டுள்ளதனது எக்ஸ் தளப்பதிவில், கடந்த 1974ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால். கச்சதீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. அதன்பிறகு பலமுறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சதீவு விவகாரத்தில் கள்ள மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கு. தேர்தல் காலங்களில் மட்டுமே அதன் ஞாபகம் வருவது விந்தை. கச்சதீவு விடயத்தில் தி.மு.க. வின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.