(புதியவன்)
கனடாவில் வீடொன்றில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட இராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாம்பினை பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் வனவிலங்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இதன்போது,மீட்கப்பட்ட இராட்சத மலைப்பாம்பு ஒன்பது அடி நீளமானது என
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராட்சத மலைப் பாம்பினை வீட்டில் வளர்த்த குற்றத்திற்காக நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளது.சட்ட விரோதமான முறையில் இவ்வாறு விலங்குகளை வீட்டில் வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.இதற்காக ஒரு லட்சம் டொலர் அபராதம் அல்லது ஓராண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.