காஸாவில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக என்கிளேவ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் கொல்லப்பட்ட 5,087 பேரில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
மேலும் இஸ்ரேலிய தாக்குதல்களில், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைக்கு இடையில், 182 குழந்தைகள் உட்பட 436 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலில் உயிரிழந்த 1,400 பேரில் குறைந்தது 14 குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் மேலும் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட சுமார் 200 பேரில் குழந்தைகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஹமாஸ் கடந்த 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை இதுவரையில் இஸ்ரேல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
😢
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.