இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றநிலையில், கிழக்கு மாகாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான கலப்பகுதிவரை 4 ஆயிரத்து 300 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளார்.
"டெங்கு நோயால் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணமும் கடந்த மாதம் பதிவாகியுள்ளது.
கடந்த வருடங்களை விட இவ்வருடம் கிழக்கு மாகாணத்தில் முதல் நான்கு மாதங்களில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேசமயம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரைக்கும் 1,800 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த மாதம் மாத்திரம் 600 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் மார்ச் மாதம் 600 இற்கும் மேற்பட்ட நோயாளர்களும், ஏப்ரல் மாதத்தில் 700 இற்கும் மேற்பட்ட நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை நகரம், உப்புவெளி மற்றும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்." என கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.