(புதியவன்)
சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டு மோசடிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சர் காசிவிஸ்வநாதன் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மோசடிகள் 18 வீதம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, சிங்கப்பூரில் 46,563 மோசடி சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், 2023 ஆம் ஆண்டில் மோசடிகள் காரணமாக 615.8 மில்லியன் சிங்கப்பூர் டொலரை இழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான மோசடிகளினால் பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டு பணிப்பெண்களில் சுமார் 500 பேர் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை, இந்தியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் இருந்து சிறந்த வேலை வாய்ப்புகள், அதிக ஊதியம், நிலையான அரசியல் மற்றும் பொருளாதார சூழலைத் தேடி சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
இந்த நிலையில், மோசடிகளுக்கு எதிராக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்சி அளித்து வருவதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசிவிஸ்வநாதன் சண்முகம் தெரிவித்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.