[புதியவன்]
நேற்று ஜனவரி 23 திங்கள்கிழமை இரவு சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் என்னென்ன என்பது குறித்த அந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி சீனாவின் சின்ஜியாங்கினில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 80 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும்” தகவலை தெரிவித்துள்ளது.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த பயங்கரமான நிலா அதிர்வால் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகள் மற்றும் வீடுகளில் இருக்கும் பொருட்களும் அதிர்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி வீட்டின் வீதியில் தஞ்சம் அடைந்தனர். இதைப்போலவே, கடந்த ஜனவரி 11-ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் ரிக்டரி அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.