புதியவன்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அரசதலைவரின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 27 கைதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(04) திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இவ்விடுதலை இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலையின் பிரதம சிறைக்காவலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.
சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.