அனைத்துத் தமிழர்களையும் வெட்டுவேன் என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதிக்கு நேற்று மாலை சென்ற தேரர் தமிழர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை எச்சரிக்கும் வகையில் கடும் தொனியில் கத்திக்கூச்சலிட்டதன் காரணமாக அந்தப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இருதயபுரம் கிழக்கில் சிங்கள மயானம் உள்ளது. அங்கு வீடு உடைத்த கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டுள்ளன. அதனைப் பார்வையிட வந்த தேரர் பொலிஸார் முன்னிலையே தமிழர்கள் மீது இனத்துவேசத்தைக் கக்கினார். அங்கு வந்த பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.