தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு ஒடுக்குமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. முந்தைய ஆட்சி காலம் போல இருக்காது என்று வாக்குறுதி கொடுத்து இருந்த தலீபான்கள் தற்போது படிப்படியாக பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எனப்படும் (என்.ஜி.ஓ க்களின் பெண்கள் பணியாற்றவும் தலீபான்கள் அரசு தடை விதித்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா கூறும் போது, உலகம் முழுவதும் மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்கள் தான் மையமாக இருக்கின்றனர். தலீபான் அரசின் இந்த முடிவு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்" என்று கடுமையாக சாடியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.