இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் 12 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் மகாஜனா சம்பியனாகியுள்ளது
கொழும்பு குதிரைப் பந்தைய விளையாட்டுத்திடலில் இன்று இறுதியாட்டம் நடைபெற்றது
குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரி அணியை எதிர்கொண்ட மகாஜனா 2:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.
முதலாவது பாதியாட்டத்தில் 1:0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்த மகாஜனா, இரண்டாவது பாதியாட்டத்தில் மேலும் ஒரு கோலைப் பெற்று வெற்றியை உறுதிசெய்தது. யாழினி ஒரு கோலையும் கேதாரணி ஒரு கோலையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.