மாதவன்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை(29) பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்த பணிப்பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ். மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இணைந்துள்ளனர்.
இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலுகங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பிரதேச செயலகங்களில் மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.