தமிழினி.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்குக்கிடையிலான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று திங்கட்கிழமை(18) காலை ஆரம்பமானது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.
முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற அதேவேளை இலங்கை 3 விக்கெட்களால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியானது இரு அணிகளுக்கும் முக்கியமான ஒரு போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.