தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை
(ஆதவன்)
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சோம்பேறித்தனமாக செயற்பட்டு வருவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டு 50க்கும் குறைவான தேடுதல் நடவடிக்கையே இலங்கை முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசியக் கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் இருபத்தி மூன்றுக்கு மேற்பட்ட விசாரணை அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர். ஆயினும் 5 க்கும் குறைவான தேடுதல் நடவடிக்கை களே இலங்கை முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பத்துப்பொருள்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுவது கட்டாயம் என நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது அதையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் செய்யவில்லை. விவசாய உபகரணங்கள் தொடர்பாக பொதுமக்கள் செய்யும் முறைப்பாடுகளைப் பரிசோதனை செய்வதற்கோ, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ கட்டளையிடுவதற்கோ உரிய பொறிமுறை காணப்படவில்லை என்றும் தேசிய கணக்காய்வு பணிமனை தெரிவித்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.