பூனகரி தம்பிராய் பகுதியிலிருந்து கிளிநொச்சி செல்வதற்கு காத்திருந்தவரை இறக்கிவிடுவதாக அழைத்துச் சென்றவர்கள் இடைநடுவில் மிரட்டி பணம் நகை என்பவற்றை பறித்துவிட்டு முக்கொம்பன் காட்டுப்பகுதியில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.
ஐந்து பவுண் நகை மற்றும் 10 000 ரூபா பணம் என்பனவே இவ்வாறு கொள்ளையிடப்பட்டதாக பூனகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பகிரப்பட்ட நிலையில் ஓமந்தை சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸாரால் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் வாகனமும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
குறித்த வாகனத்தில் பெண் ஒருவர் உட்பட நால்வர் பயணிதத்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் பெண் ஒருவர் உட்பட மற்றொரு நபரை இனங்காணபதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.