மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டதில் 38 வயது இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் ஏறாவூர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியை செலுத்திவந்த நபர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையைக் கடக்க முற்பட்ட போதே ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளானார். முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.