மன்னார் நகர் பகுதியில் எழுத்தூர் தரவன்கோட்டை வீதியானது நிண்டகாலமாக புணரமைப்புச் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது. அத்துடன் மன்னார் டிப்போ வீதி, தாழ்வுபாடு போன்ற சில இடங்களில் வீதிகள் பூரணப்படுத்த படாமல் உள்ளதால் போக்குவரத்துக்கு சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை தெரியப்படுத்தியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். எனவே குறித்த வீதிகள் அவசரத் தேவைகளுக்கு பயனபடுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் காதர் மஸ்தான் உட்பட உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து குறித்த வீதியை விரைவாக புணரமைத்துத் தருமாறு மக்கள் கேட்டுக் கொண்டார்கள்.
mgik6b
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.