(பட்சி)
தமிழரசுக் கட்சி இவ்வளவு தள்ளாடுறதுக்கு என்ன காரணம் எண்டு நினைக்கிறியள்? வேறையென்ன. பதவியாசை பிடிச்ச பெரியவை இன்னமும் கதிரையைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டிருக்கிறதுதான். கட்சியில இவ்வளவு நாளும் முக்கியமான பொறுப்புக்களில இருந்தவையெல்லாருமே 80 வயசைத் தாண்டின ஆக்கள்தான். பொருளாளர், நிர்வாகச் செயலளர், மூத்த துணைத் தலைவர் எண்டு கட்சியின்ர நடவடிக்கையளைத் தீர்மானிக்கிற பொறுப்பில இருந்தவையெல்லாம் எப்பவோ பென்சனில வீட்டை போயிருக்கவேண்டிய ஆக்கள். ஆனால் புது நிர்வாகத்திலையும் தங்களுக்கு இப்ப இருக்கிறதைவிடவும். அதி காரமுள்ள பதவி வேணும் எண்டு கேக்கினம். கட்சிக்குள்ள இவ்வளவு வெட்டுக்குத்து நடக்கிறதுக்கு காரணமே இவையின்ர பதவியாசையும்தான்.
இப்ப வழக்குப் போடப்பட்டிருக்கிறதுக்கு. முக்கியமான காரணங்கள் பொதுச்சபை உறுப்பினர்களின்ர எண்ணிக்கை கூடிப்போச்சு, கடைசி நேரத்தில் பொதுச் சபையில இல்லாதவையை வாக்களிக்க விட்டது எண்டதுகள்தான். அதுக்கு முக்கியமான காரணம் நிர்வாகச் செயலாளர் தான். உண்மையா அது ஒரு டம்மிப் பதவி. ஆனால் பொதுச் செயலாளர்மார் தங்கட வேலைச் சுகத்துக்காக, நிர்வாகச் செயலாளரிட்டையே பொதுச்சபை உறுப்பினர் பட்டியலைச் செய்யிறவேலையைக் குடுக்கிறவை. வீட்டுக்கட்சியின்ர புதுத்தலை வரைத் தெரிவு செய்யிற எலக்சன் நடக்கிற நாள் மட்டும் அந்தப் பட்டியலை நிர்வாகச் செயலாளர் செய்து முடிக்கேலை. கடைசி நேரத்தில, ஏதோ எக்ஸாமுக்கு பார்த்து எழுதக் கொண்டந்த நோட்ஸ் மாதிரி, ஒரு கொப்பிப்பேப்பரில கொஞ்சப் பேரை பொதுச்சபை உறுப்பினர் எண்டு நிர்வாகச் செயலாளர் குடுத்தவர். அவையைத்தான் வாக்களிக்க விடக்கூடாது எண்டு பிரச்சினை கிளம்பி, பிறகு ஒருமாதிரி எல்லாரும் அரை மனதோட வாக்களிக்கவிட்டவை. இந்தப் பட்டியலை முதலே ஒழுங்கா நிர்வாகச் செயலாளர் முடிச்சுப்போட்டு, எல்லாருக்கும் குடுத்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காதே. ஒருவேளை பிரச்சினையைக் கிளப் போணும் எண்டதுக்காகவே அவர் இப்பிடிச் செய்தாரோ தெரியேலை.ஏனெண்டால் தலைவர் தெரிவுக்கு போட்டிபோட்ட சுமந்திரன்ர வேட்புமனுவைப் பிரேரிச்சு கையெழுத்து வைச்சதில நிர்வாகச்செயலாளரும்
ஒராள்.
அதே சுமந்திரனின்ர வேட்புமனுவில கையெழுத்து வைச்ச இன்னொருத்தர் இப்பத்தை வடமாகாண அவைத்தலைவர் சிவஞானத்தார். அவருக்கும் தலைவர் பதவியில கண். எண்டாலும் போட்டிபோட்டால் நாலைஞ்சு வாக்குக்கூடக் கிடைக்காது எண்டதால, சுமந்திரனை சப்போர்ட் பண்ண வெளிக்கிட்டவர். கட்சியின்ர சிரேஷ்ட துணைத்தலைவர். ஆனால் பெரும் பம்பல் என்னெண்டால். அவருக்கு இன்னமும் கட்சி உறுப்புரிமை இலக்கம் இல்லையாம். கட்சியின்ர உறுப்புரிமை இலக்கம் கூட இல்லாதவர் தலைவர் தெரிவுக்கு நிக்கிற ஒராளின்ர வேட்புமனுவை பிரேரிச்சா அது சட்டப்பிழை இல்லையோ? இப்ப நடக்கிற குழப்பங்களுக்கு இவரும் ஒருபக்கம் தூண்டி விட்டவர். ஆனால் ஒண்டுமே தெரியாத ஆள் மாதிரி 'எல்லாரும் சமாதானமாப் போங்கோ எண்டு நல்ல பிள்ளைக்கும் நடிக்கிறார்.
இப்பிடி வயசான பிறகும் குழப்பங்காய்ச்சியளா இருக்கிறவை, கட்சியைவிட்டு ஒதுங்கினாலே எல்லாப் பிரச்சினையும் தன்ர பாட்டில தீரும் பாருங்கோ. (ஏ)
(23.02.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.