இண்டைக்கும் பள்ளிக்கூட விசயமொண்டைப் பற்றித்தான் சொல்லோணும். நெருப்பில்லாமலே சோறு காய்ச்சிற அளவுக்கு வடக்கில கடும் வெக்கை. போகப் போக இன்னும் வெக்கை கூடுமெண்டும் சொல்லுப்படுகுது. இப்பிடிப்பட்ட நிலையில பள்ளிக்கூடங்களில் விளையாட்டுப் போட்டியளை நடத்திக்கொண்டுதான் இருக்கினம். பள்ளிக்கூடக்காரரும் ஒண்டும் செய்யேலாது. முதலாம் தவணைக்குள்ள விளையாட்டுப் போட்டியளை வைச்சு முடிச்சே ஆகோணும். வைக்காமல் விட்டால் பிறகு ஓ.எல்.எக்ஸாம் அதுக்குப் பிறகு ஏ.எல். எக்ஸாம் தமிழ்த்தினப்போட்டி, ஆங்கிலதினப்போட்டி எண்டு நேரமே இருக்காது. அதால என்னதான் வெயில் உச்சியைப் பிளந்தாலும் பரவாயில்லை. முதலாம் தவணைக்குள்ள விளையாட்டுப்போட்டியை நடத்தாமல் ஓயமாட்டம் எண்டகணக்கில எல்லாப் பள்ளிக்கூடங்களிலையும் விளையாட்டுப்போட்டியள் நடக்கத்தான் செய்யுது.
வெயில் காலத்தில விளையாட்டுப் போட்டியளை வைச்சால், பிள்ளையளுக்கு ஏலாம வந்திடும் எண்டு "விளையாட்டுப் போட்டியளை வைக்கவேண்டாம் எண்டு அரசாங்கம் அறிவிச்சது. அப்பிடி அறிவிச்ச பிறகும் எங்கடையாக்கள் விளையாட்டுப்போட்டியளை வைச்சவை. எங்கடையாக் களின்ர இந்தக் 'கடமையுணர்ச்சியைப்பார்த்து அரசாங்கத்துக்கே கண்ணெல்லாம் வேர்த்து 'இனி நீங்கள் போட்டியளை வைக்கலாம் எண்டு குத்துக்கரணம் அடிச்சிது. அப்பிடி அரசாங்கம் விளையாட்டுப் போட்டியளை வைக்கலாம் எண்டு பச்சைக்கொடி காட்டேக்கதான் வெக்கை இன்னும் உக்கிரமா இருந்தது. தடை போட்டிருக்கேக்கையே போட்டியளை வைச்சவை, தடையை நீக்கின பிறகு கைகட்டிக்கொண்டு இருப்பினமோ? எல்லாப் பள்ளிக் கூடங்களிலையும் இப்ப விளையாட்டுப்போட்டியள் தான்.
பிள்ளையளைப் புத்தகப்பூச்சியா வைச்சிருக்காமல் அவை ஆளுமையான ஆக்களா வளர விளையாட்டுப் போட்டியளை கட்டாயம் வைக்கத் தான் வேணும். ஆனால் 'உச்சிவெயில் உடம்பைக் காய்ச்சி எடுத்து கருவாடு ஆக்கினாலும் பரவாயில்லை, நாங்கள் போட்டியை வைச்சால் மத்தியானம் ஒண்டரைக்குத்தான் வைப்பம் எண்டு பள்ளிக் கூடங்கள் ஒற்றைக்காலில நிக்கிறதுதான் ஏனெண்டு தெரியேலை. முந்தின காலங்களில் நாட்டுப்பிரச்சினையால பொழுதுபடமுதல் நிகழ்ச்சியை முடிக்க வேணும் எண்டதுக்காகத்தான் ஒருமணி, ஒண்டரை மணிக்கெல்லாம் விளையாட்டுப் போட்டியளை வைச்சவை. ஆனால் இப்ப எத்தினை மணிமட்டும் போட்டியளை வைக்கலாம். அப்ப வெயில் கதகளி ஆடிக்கொண்டிருக்கிற. ஒண்டரை மணிக்குத்தான் வைப்பம் எண்டுறதில என்ன செண்டிமெண்ட் இருக்கெண்டு ஒருத்தருக்கும் விளங்கேலை. முன்னுக்கு போற செம்மறியாடு தவறி விழுந்தால் பின்னுக்கு வாற எல்லா செம்மறியாடும் விழுமாம். அதைமாதிரி இவையளும் முந்தின காலத்தில ஒண்டரை மணிக்கு விளையாட்டுப் போட்டியளை வைச்சால் தாங்களும் அதே 'சுபமுகூர்த்த நேரத்திலதான் வைப்பம் எண்டு நிக்கினமோ தெரியேலை. விடியக்காலமையில இல்லாட்டி வெயில் தணிஞ்ச பிறகு பின்னேரத்திலையெண்டாலும் விளையாட்டுப் போட்டியை வைச்சால் ஏதும் தெய்வக்குற்றமாகிப் போடுமோ? ஆரும் விசயம் தெரிசஞ்வை சொல்லுங்கோவன்.
(04.04.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.