செல்வன்.
யாழ்-இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் இலங்கை ஏதிலிகள் புனர்வாழ்வு நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தும் சர்வதேச மகளிர் தின விழா புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுவரும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராசாவும் மதிப்புக்குரிய விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் சி.சாய்முரளி முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலர் சி.குணபாலன், பேராசிரியர்கள், உயர்நிலை, அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பல்வேறு சாதனைப்பெண்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் பாரம்பரிய கலை அம்சங்களுடன் விருந்தினர் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு தொழில் முயற்சியாளர்களது விற்பனை சந்தை திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்நிகழ்வில் அதிதிகள் உரைகளும் கலை நிகழ்வுகளும் சாதனைப் பெண்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.