செல்வன்.
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் உள்ளிட்ட இருவர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு காவல்துறையிரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் குறித்த கிராம அலுவலர் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதை பொருட்களை வியாபாரம் செய்து வந்ததாக மக்களால் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த கிராம அலுவலர் பல்வேறு போதை பொருட்களை இளைஞர்கள் ஊடாக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து வருவதோடு அவரும் குறித்த போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக இருந்ததை அறிந்த மக்கள் புதுக்குடியிருப்பு காவல்துறையிருக்கு தகவல் வழங்கியதை அடுத்து புதுக்குடியிருப்பு காவல்நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு காவல் நிலைய அதிகாரிகள் பல நாட்களாக தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்த நிலையில் கைது செய்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட போது குறித்த நபர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தமை அறியப்பட்டிருக்கின்ற நிலைமையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
.
மேலும் குறித்த நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.