புத்தளத்தில் கடும் சோதனை
(ஆதவன்)
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்துகள் புத்தளத்தில் வைத்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு வழிமறிக்கப்பட்டு பொலிஸாரால் மோப்பநாய்
உதவியுடன் சல்லடைபோட்டு தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து, தனியார் பயணிகள் சொகுசு பேருந்து மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே புத்தளத்தில் வைத்து பொலிஸார் மற்றும் போதை ஒழிப்புப் பிரிவினர் இணைந்து பேருந்துகளைத் திடீரென வழிமறித்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய இடங்களில் இருந்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்துகள் புத்தளம் பகுதியில் வைத்து நள்ளிரவு நேரத்தில் திடீரென வழிமறிக்கப்பட்டு சல்லடைபோட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
பேருந்துக்குள் ஏறிய பொலிஸார் முதற் கட்ட சோதனை மேற்கொண்டதை அடுத்து சகல பயணிகளும் வரிசையாக இறக்கப்பட்டு அவர்கள் கைகளில் வைத்திருந்த பயணப்பை உள்ளிட்ட உடைமைகள் வீதி ஓரத்தில் விரிக்கப்பட்டிருந்த பாய்களில் அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் மோப்ப நாய்கள் உதவியுடன் அவை தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து பேருந்தின் கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பொதிகளும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர மாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது டன் பேருந்தின் உள்பகுதியில் இருக்கைப் பகுதியும் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.
இதன்போது எதுவித போதைப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.