மன்னார் மாவட்டத்தில் கழிவகற்றல் மிகப் பெரியதொரு பிரச்சினையாக இருக்கிறது.
இதற்குத் தீர்வு காண்பதற்கு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து முயற்சிப்பேன் என மன்னார் மாவட்டச் செயலர் க.கன கேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது இதனைத் தெரிவித்தார்.
'ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு குழு இருக்கின்றது. அதில் மாவட்டச் செயலர் தலைவராகவும் ஏனைய திணைக்களங்களின் பிரதிநிதிகள் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரிகள் எல்லோரையும் இணைத்து அது செயற்படுகின்றது. அந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக மணல் அனுமதி வழங்கப்படும் என்றாலும் அதில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கும் தீர்மானங்களை எடுப்போம்' - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.