ஆதவன்
புதுக்குடியிருப்பு, தேவிபுரம் 'ஆ' பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேயிடத்தைச் சேர்ந்த விநாயகம் என்று அழைக்கப்படும் சி.சிவபாஸ்கரன் (வயது - 55) என்பவரே உயிரிழந்தவராவார்.
புதுக்குடியிருப்பு தெங்கு, பனை கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினரான இவர் நேற்று மாலை கள்ளை தவறணைக்குக் கொடுத்து விட்டுத் திரும்பியுள்ளார்.
அப்போது தேவிபுரம் 'ஆ' பகுதியில் உள்ள வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக் கட்டையுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த அவர்
மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. (எ )
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.