(புதியவன்)
யாழ் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலமையில் ஆன யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
குருநகர் தண்ணிராங் பகுதியில் கடந்தவாரம் இரவு நேரம் 90,000பணத்தையும் மத்தியூஸ் கிழக்கு குருநகர் பகுதியில் 850000ருபா பெறுமதியான ஐந்தரைப்பவுண் நகைகளை திருடிச்சென்ற பிரதான சந்தேக நபர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரிடம் பிடிபட்டார்.
சந்தேக நபர் தான் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளதுடன் அதனை தான் போதை வஸ்துகாகத்தான் திருடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரிடம் விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் குறித்த நகை மற்றும் பணத்தினை மீட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.