மாதவன்.
யாழ்ப்பாண நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் சற்றுமுன்னர் முச்சக்கர வண்டி மற்றும் சிறியரக வாகனம் ஆகியன விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பிரதான வீதி நாலுகால்மடம் சந்தியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில் பின்புறமாக ஆறுகால்மடம் பகுதியில் இருந்து வருகை தந்த பட்டாரக வாகனம் மோதியது.
இதன் போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்தது. முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடத்தைச் சேர்ந்த அஜிந்தன் (வயது-20) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேவேளை பட்டாரக வாகனம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ். மாவட்ட போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.