(ஆதவன்)
இந்தியாவின் மணிப்பூரிலிருந்து சென்னை வழியாக இலங்கையின் தலை மன்னாருக்குக் கடத்தி வரப்படவிருந்த சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான 67 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் இருவர் நேற்று முன்தினம் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் எனக் கூறப்படுகிறது. போதைப்பொருள் மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு எல்லை வழியாகக் கடத்திக் கொண்டுவரப்பட்டது என்று சந்தேகநபர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் தமிழகப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.