புதியவன்.
இலங்கை அணியின் இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்கவுக்கு இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்டப்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியின் பின்னர், போட்டி நடுவரின் தீர்ப்புக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இதன்காரணமாக அவருக்கு மூன்று தரமிரக்கல் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
மேலும், ஹஸரங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள போட்டி தடையின்படி ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகள் அல்லது இரண்டு இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகள் என முதலில் வரும் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.
எனவே, வனிந்து ஹஸரங்கவால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அடுத்த மாதம் இடம்பெறவுள்ள முதல் இரண்டு இருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாதென்பது குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.