(யோகி)
A.35 பிரதான விதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று இன்று திங்கட்கிழமை(05.02.2024) மாலை 5.40 மணியலவில் விசுவமடு பகுதியில் உந்துருளி ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட மகிழுந்து வேக கட்டுப்பாட்டை இழந்து அருகிலே இருந்த கடையின் முன்பகுதியில் நிறுத்தி பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு உந்துருளி ஒரு துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றை மோதி தள்ளி கடையினுல் புகுந்தது.
இவ்விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மகிழுந்து கீழ்ப்பகுதியில் இருந்து இரண்டு உந்துருளி மற்றும் துவிச்சக்கர வண்டி என்பனவற்றை மீட்டுள்ளனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.