பலாங்கொடை பிரதேசத்தில் ஆலயம் ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவனொருவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் இன்று(06) தோற்றவிருந்த அரினாத் ரஞ்சித் குமார என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
காலை பலாங்கொட மரதன்ன பிரதேசத்தில் உள்ள ஆலயம் சென்றவராவார். அங்கு மயங்கி விழுந்த மாணவன் மரதன்ன மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் குறித்த மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேத பரிசோதனை பலாங்கொடை மருத்துவமனையில் நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.