எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவது தொடர்பாக அறிவதில் இந்தியா ஆர்வம் காண்பித்துவருகின்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் இது தொடர்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ; ஜா நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை, இந்தியத் தூதுவர் கடந்த வாரம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இதன்போது, எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? தமிழ் மக்களின் மனநிலை என்ன? தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் என்ன நிலைப்பாடு இருக்கின்றது? என்று இந்தியத் தூதுவர் கேள்விகளை எழுப்பியுள்ளதாக அறியமுடிகின்றது.
'தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வழங்கப்படாதிருக்கும் நிலையில் இம்முறை தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிறந்த மாற்றுத்திட்டமாக அமையும் என்ற நிலைப்பாடு காணப்படுவதாக' சிறிதரன் எடுத்துரைத்துள்ளார்.
அரச தலைவர் தேர்தல் தொடர்பில் சீனாவின் அமைச்சர் ஒருவர் இரகசியமாக இலங்கையில் கருத்துக் கணிப்பு நடத்திச் சர்ச்சை எழுந்திருந்த நிலையில், இந்தியாவும் அரச தலைவர் தேர்தல் தொடர்பான தமிழ் மக்களின் நாடித்துடிப்பை அறிய முட்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (அ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.