(புதியவன்)
இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் சுமார் 100 அடி உயரம் கொண்ட மிகப் பெரிய விளம்பர பலகை கோபுரம் ஒன்று வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர். இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையால் விளம்பரப்பலகை சரிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது.
அதேவேளை மாநகர சபையால் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட விளம்பர பலகையின் அளவை விட ஒன்பது மடங்கு அதிகமாக இது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விளம்பர பலகையை அமைத்த நிறுவனம் அதனை காட்சிப்படுத்துவதற்கு மும்பை நகராட்சி அமைப்பிடம் அனுமதி பெற்றிருக்கவில்லை என்று மாநகராட்சி தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.