அரச அலுவலகர்கள் புறக்கணிப்பு!
(மாதவன்)
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும் நிலையில் அரச நிர்வாக சேவை அலுவலகர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், அங்கயன் இராமநாதன், மாவட்ட செயலர் மற்றும் பணிமனை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயம், கல்வி, சுகாதாரம், காணி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
நாடளாவிய ரீதியில் அரச நிர்வாக சேவை அலுவலகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் பிரதேச செயலக அலுவலகர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.