ஆனால் கைதானோருக்குப் பிணை இல்லை
(ஆதவன்)
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடையுத்தரவு நேற்றுத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சேனையூர் பிள்ளையார் கோவிலில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைது செய்யப்பட்டிருந்தவர்கள் தொடர்பான வழக்கு நேற்று சிறப்பு நகர்த்தல் பத்திரம் மூலம் மூதூர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் தொடர்பான வாதங்கள் மற்றும் சமர்ப்பணங்களைக் கேட்ட நீதிமன்றம், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை நீக்குவதாக அறிவித்துள்ளது. எனினும் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழேயே முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கியவர்கள் கைது செய்யப்பட்டமையால் நேற்று அவர்களுக்கான பிணை வழங்கப்படவில்லை. சட்டத்தரணி க. சுகாஷ் பிரதிவாதிகளுக்காக மன்றில் முன்னிலையாகியிருந்தார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.