(மாதவன்)
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் 7221 பேர் கொல்லப்பட்டதாக பொய்யான தரவை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிட்டுளார் என, வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் நேற்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இறுதிப் போர் நடைபெற்ற வேளை கிளிநொச்சி மாவட்ட முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களின் பதிவில் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. போர் முடிந்த போது இராணுவத்தால் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து எழுபத்தையாயிரம், மீதி மக்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் போரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்த பின்னர் பல தரப்புக்கள் வேறுபட்ட எண்ணிக்கையில் கொல்லப்பட்ட மக்களின் தொகையை வெளியிட்டன. உதாரணமாக ஐ.நாவின் தருஸ்மன் அறிக்கை நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது. எனவே சரத் வீரசேகர பொய்யான தரவுகளை கூறி இறுதிப் போரில் இனப்படுகொலை நடைபெறவில்லை அப் போரில் மிக குறைவாக விடுதலைப்புலிகள் உட்பட ஏழாயிரம் பேர் கொல்லப்பட்டதாக பொய்ப் பித்தலாட்டம் போடுகிறார் என்றுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.