'ஆஸ்பத்திரிக்குப் போறதெண்டால் ஆளில்லாமல் போகாதே' எண்டொரு புதுமொழி இப்ப இருக்குது. வருத்தம் வந்து வார்ட்டில இருந்தால் அவையைச் சரியாப் பராமரிக்கிறதைப் பொறுத்துத்தான். அந்த வருத்தம் மாறும். டொக்டர்மார் சொல்றபடிநேரத்துக்குச் சாப்பாடு, மருந்து, தண்ணி, பழவகை எண்டெல்லாம் குடுக்கிறதில இருந்து அவைக்கு மலசலம் கிளீன் பண்றது வரைக்கும் பணிவிடை செய்யவேணும். முந்தி யெண்டால் எல்லாருக்கும் சொந்த பந்தமெண்டு எல்லாரும் இஞ்சையே இருக்கிறதால மாறிமாறி ஒவ்வொருத்தர் வருத்தக்காரரைப் பராமரிப்பினம். ஆனால் இப்ப அப்பிடியில்லையே. வீட்ட இருக்கிற ஆக்களை விடவும் வெளிநாட்டில நிக்கிறவை தானே கூட. வீட்ட நிக்கிறவையும் ஏதாவது ஒரு வேலைக்குப் போய்வரு வினம். ஒருநாள். ரண்டுநாள் எண்டால் லீவைப் போட்டு பராமரிக்கலாம். ஆனால் கிழமைக்கணக்கில ஒராளை ஆஸ்பத்திரியில வைச்சுப் பராமரிக்கிறதெண் டால், ஆரையும் காசுக்குப் பிடிச்சால்தான் சரிவரும்.
ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலையும் இப்பிடி வருத்தக்காரரைப் பராமரிக்கிறதுக்கெண்டு ஆக்கள் இருக்கினம். அவையெல்லாரும் ஒரு கொம்பனியில தங்கட பேரைப் பதிவு செய்திருப்பினம், அந்தக் கொம் பனியின்ர ஒப்பீஸ். எல்லா ஆஸ்பத்திரியிலையும் இருக்கும். அங்கபோய், சொன்னால் அவை ஒராளை அனுப்புவினம். பராமரிக்கிறவைக்கு ஒவ்வொரு நாளும் ரண்டாயிரம் ரூபா குடுக்கோணும். அதில 400 ரூபா கொம்பனிக்கு, 1600 ரூபா பராமரிக்கிற ஆளுக்கு. இப்பிடி வருத்தக்காரரை பராமரிக்கிறவையில கனபேர் தாங்கள் வாங்கிற சம்பளத்துக்குத் துரோகம் செய்யாமல், வடிவாத்தான் பாக்கினம். ஆனால், ஒருசிலபேர் காசு உழைச்சால் காணும் எண்டுதான் நடக்கினம் அவையின்ர கொம்பனியில ஒராளைப் பாக்கத்தான் பதிவு இருந்தாலும், வார்ட்டில நிக்கிற வேற வருத்தக்காரரோட போய்க் கதைச்சு அவையையும் பராமரிப்பினம். சிலவேளையளில ஒரே ஆளே நாலைஞ்சு பேரைப் பராமரிக்கிறதும் உண்டு. ஒரே நேரத்தில கனபேரைப் பராமரிக்கிறதெண்டது அவையின்ர கெட்டித்தனம். ஆனால் இஞ்ச கெட்டித்தனத்தை விட, ஒரேயடியா நிறையக் காசு உழைக்கிறதுதான் அவையின்ர நோக்கம். அதால எல்லாரையும் சரியாப் பராமரிக் கேலாமல், வருத்தக்காரரையும் கஷ்டப்படுத்துகினம் எண்டு கனக்க முறைப்பாடு. இப்பிடி ஒரு வருத்தக்காரருக்கு அவரைப் பராமரிக்கிறவர் ஒழுங்கா தண்ணி குடுக்காததால அவர் செத்தவர் எண்டும் ஒரு கதை" அடிபடுகுது.
வருத்தக்காரரைப் பராமரிக்கிறம் எண்டு சொல்லிக் காசை வாங்கிப் போட்டு, அவையள் வார்ட்டில நிக்கிறதைவிட கன்ரீனில நிண்டு பம்பலடிக்கிறது தான் கூடவாம். இரவிலையும் வார்ட்டில நீக்காமல் வேற எங்கையோ போய் நல்லா நித்திரை கொண்டிட்டு விடியத்தான் வருவினம். நோயாளிக்கு தேவைப்ப டேக்க கிட்டவும் காணக்கிடைக்காத இந்தப் பராமரிக்கிற ஆக்கள், விசிட்டர்ஸ் நேரத்தில மட்டும் பம்பரம் மாதிரி சுழண்டடிச்சு 'நாங்கள் விழுந்து விழுந்து கவனிக்கிறம்' எண்டு சொந்தக்காரருக்கு காட்டிக் கொள்ளுவினம். அவைபோன பிறகு பழைய குருடி. கதவைத் திறவடிதான். இப்பிடி வருத்தக்காரரைப் பராமரிக்க நிக்கிறவைக்கு நேர்ஸ்மாரும் சப்போர்ட். ஏனெண்டால் நேர்ஸ்மாருக்கு சாப்பாடு வாங்கியந்து குடுக்கிறது. அவைக்கு தொட்டாட்டு வேலையள் செய்யிறதெல்லாம் இந்தப் பராமரிக்கிற ஆக்கள் தான். அதால அவையும் கண்டுகொள்றேலை. பராமரிக்கிற துக்கு ஆக்களை அனுப்பிற கொம்பனியும் அதை மேற்பார்வை செய்யிறேலை. கடைசியிலஅந்தரப்படுறதென்னவோ, அப்பாவி வருத்தக்காரர்தான்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.