சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு!
(ஆதவன்)
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாகத் திரளும் தமிழர்கள் அல்லது முள்ளிவாய்க்காலை நோக்கிஉணர்வுபூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள், அதேபோல வரும் அரசதலைவர் தேர்தலிலும் உணர்வு பூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஒரு தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து தமிழ் மக்களின் தேசியத் திரட்ச்சியைப் பாதுகாக்க வேண்டும், என்று பிரதே சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் சிவில் சமூகங்களின் தின் கூட்டிணைவு விடுத்துள்ள அறிக்கையில், மே 18 இன அழிப்பு நினைவுநாளில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு அழைக்கிறோம்.
எல்லா நினைவேந்தல்களும் தமிழ் மக்களை ஓர் உணர்ச்சிப் புள்ளியில் குவிக்கின் மற்றன. அவை தாயகத்தில் மட்டுமல்ல உலகப் பரப்பெங்கும் தமிழ் மக்களை ஓருணர்ச்சிப் புள்ளியில் குவிக்கின்றன. வடக்குக் கிழக்காக சட்டரீதியாகப் பிரிக்கப் பட்டிருக்கும் தமிழர் தாயகத்தை உணர்வுபூர்வமாகப் பிணைக்கவல்லன. அதனால்தான் கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கும் பரிமாறுவதற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டிலிருந்து கிழக்கில் நினைவேந்தலுக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்து வருவது தற்செயலானது அல்ல. வடக்கும் கிழக்கும் உணர்வுபூர்வமாக இணைவதை, தமிழர்களின் தாயகம் ஓருணர்ச்சிப் புள்ளியில் ஒன்றிணைவதைத் தடுக்க விரும்பும் சக்திகள் கிழக்கில் நினைவேந்தலைத் தடுக்கின்றன. இந்த அடிப்படையில் திருகோணமலை - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகிய எமது உறவுகளோடு தமிழ் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு தன் தோழமையை உறுதிப்படுத்துகின்றது. அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப் பட்ட நடவடிக்கைகளைக் கண்டிக்கின்றது. அரசதலைவர் தற்போது முனைப்புக் காட்டும் உண்மை மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை ஏன் நம்ப முடியாது என்பதற்கு மேற்படி கைது நடவடிக்கைகள் போதிய சான்றுகள் ஆகும்.
நினைவேந்தலை ஆகக் கூடிய மட்டும் பரவலாக்குவதும் தொடர்ச்சியானது ஆக்குவதும்தான் இத்தருணத்தில் தமிழ் அத்திக் மக்கள் செய்யவேண்டியவை. கிழக்கில் ஓர் ஊரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஏனைய எல்லா ஊர்களிலும் அதை பரவலாக்கவேண்டும். இன்று நமது சிவில் சமூக கூட்டிணைவில் வரும் அனைத்து சிவில் சமூகங்களும் தத்தமது எல்லைகளுக்கு உட்பட்டு தத்தமது என்று பிரதேசங்களில் நினைவேந்தலை கடைப்பிடிக்குமாறும் நினைவேந்தும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு கொடுக்குமாறும் வேண்டுகிறோம். தமிழ் மக்களை ஓர் உணர்ச்சிப் புள்ளியில் இணைக்கின்றது. அது தமிழ் ளையும் மக்களின் தேசத் திரட்சியை உணர்வு பூர்வமாகப் பாதுகாக்கின்றது. அவ்வாறு தமிழ் மக்களின் தேசத் திரட்சியை உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் உறுதிப்படுத்தும் விதத்தில் வரும் அரசதலைவர் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும், என்ற கோரிக்கையை நமது சிவில் சமூகங்களின் கூட்டிணைவு முன்வைக்கின்றது - என்றுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.