(புதியவன்)
இறுதிப் போரில் மக்கள் பட்ட துன்பங்களை காட்சிப்படுத்தியபடி, கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி சென்றுகொண்டிருந்த நினைவேந்தல் ஊர்தியை புதுக்குடியிருப்பு பொலிஸார் இடைமறித்தனர். ஊர்தியை சோதனையிட்டதுடன் சாரதியிடம் ஆவணங்களை காண்பிக்குமாறு கூறி அவற்றை அலைபேசியில் ஒளிப்படமும் எடுத்துள்ளனர். நீண்ட நேரம் ஊர்த்தியை பொலிஸார் நிறுத்தி வைத்திருந்தமையால் அந்த இடத்தில் குழப்பம் - பதற்றமான சூழல் உருவாகியிருந்தது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.