திண்ணையில படுத்திருந்தவனுக்கு திடுக்கெண்டு கலியாணம் மாதிரி, எப்பெப்ப என்னென்ன வேலைத்திட்டங்கள் எங்களைச் சுத்தி நடக்குதெண்டே தெரியாமல் இருக்குது. இரவு நித்திரை கொண்டிட்டு விடிய எழும்பி றோட்டுக்கு வந்த பிறகுதான் றோட்டில ஏதோ கிடங்குகிண்டி வேலை நடந்திருக்குது எண்டு தெரியுது. யாழ்ப்பாணம் ரவுணை அண்டின இடங்களில சனநடமாட்டம் கூட எண்டதால, அதைக் குழப்பாமல் இரவிரவாத்தான் றோட்டு வேலை, வடிகால் வேலை, ரெலிபோன் லைன் வேலை, பைப் லைன் வேலை எல்லாம் நடக்கும். இப்ப பைப் லைன் சீசன். இரவில யாழ்ப்பாணம் ரவுணில இருந்து நல்லூர் வரைக்கும் எங்கையாவது ஒரு றோட்டிலை லைட் பூட்டி வேலை நடந்துகொண்டிருக்கும். ஆளில்லாக் கடையில ரீ ஆத்துற மாதிரி, இன்னும் குடிதண்ணி எங்க இருந்துவரப்போகுதெண்டே ஒழுங்கான முடிவெடுக்காட்டியும், எல்லா இடமும் பைப் தாட்டு முடிக்கோணும் எண்டதில எங்கட ஆக்கள் குறியா இருக்கினம். இரவெண்டும் பாராமல் சனத்தைக் குழப்பாமல் உந்த வேலையைச் செய்யிறவையை ஒருபக்கம் பாராட்டினாலும், இன்னொரு பக்கம் விடியிறதுக்குள்ள வேலையை முடிக்கோணும் எண்ட அந்தரத்தில் அவை விடுகிற சின்னச் சின்ன பிழையள் பெரிய ஆபத்தை கொண்டுவாறதையும் சொல்லத்தான் வேணும்.
யாழ்ப்பாணம் ரவுணுக்கு கிட்டவுள்ள திருநெல்வேலி. மாரியம்மன் லேனில, முந்தநாள் பெய்த மழையால, உந்தப் பைப் தாட்ட இடங்களில் வெள்ளம் நிரவிப்போய் நிண்டது. வெள்ளம் எது. பள்ளம் எதுவெண்டு ஆரும் கண்டுபிடிக்க ஏலாது. வீடுகளுக்கு முன்னால பைப் தாட்டால் அதை மூடிப்போட்டுத்தான் போறவை. அதால பயமில்லை எண்டு நினைச்சு. மோட்டர் சைக்கிளை உருட்டிக் கொண்டந்த ஒராள் ஒழுங்கையையும், றோட்டையும் பிரிச்சபடி கிடந்த வெள்ளத்தை தாண்டுவமெண்டு காலை எட்டி வைச்சிருக்கிறார்.அவ்வளவுதான், மெல்லத் திறந்தது கதவு படத்தில வாற அமலா மாதிரி, ஆள் அந்த வெள்ளத்துக்க புதையத் தொடங்கிட்டுது. விடியக் காலைமை எண்டதால பெரிசா சனப்புழக்கமும் இல்லை. முழங்கால் மட்டும் ஆள் தாண் டிட்டார். விட்டால் முழுசாப் புதைஞ்சு போடுவனோ எண்டு அவருக்குப் பயம் வந்திட்டு. ஆனால் நல்ல வேளையா அந்த றோட்டால போன இன்னொரு ஆள் வந்து ஒருமாதிரி அவரை அந்த வெள்ளமும் சேறுமாக் கிடந்த பள்ளத்துக்க இருந்து வெளியில இழுத்தெடுத் திட்டார்.சரி எண்டு தன்னைத் தானே தேத்திக்கொண்டு நொண்டி நொண்டி அவர் விழுந்து கிடந்த மோட்டர் சைக்கிளை எடுத்துக்கொண்டு போட்டார்.
அந்த பைப்பை தாட்டவை ஒழுங்கா மூடியிருந்தால், இப்பிடி புதைஞ்சிருக்க வேண்டியிருக்காதே. கடமைக்கு மண்ணை அள்ளி மேலால தூவிப்போட்டுப் போனால் தான் இப்பிடி நடக்கும். ஒருவேளை அந்தாள் மோட்டர் சைக்கிளை உருட்டாமல் ஓடிக்கொண்டு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும். அதைவிடுவம், ஆரும் சின்னப்பிள்ளையள் இப்பிடி ஒரு ஆபத்து இருக்கெண்டு தெரியாமல் வந்திருந்தால் கதை முடிஞ்சிருக்குமே. ஒருவேலையைச் செய்தால், அதால என்ன பாதிப்பு வருமெண்டு யோசிச்சு, அதுக்கேத்தபடி செய்யோணும். சிலவேளையளில நேரம் பத்தாமல், சரியாக் கிடங்கை மூட ஏலாட்டி, அந்தக் கிடங்குகளை அடையாளப்படுத்தி ஏதாவது அறிவிப்புப்பலகையை வைச்சால், சனம் கொஞ்சம் விலத்திப் போகுமெல்லோ? செய்வன திருந்தச் செய்யெண்டு எங்கட ஆக்கள் சும்மா சொல்லேலையே.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.